Posts

பாடகர் திலகம் TMS நடித்து பாடும் அற்புத பாடல்.

Image
பாடகர் திலகம் TMS நடித்து பாடும் அற்புத பாடல். 'கல்லும் கனியாகும்' படத்தில். மீசையும், தாடியுமாக வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கும் டி.எம்.எஸ். ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அங்கிருக்கும் குழந்தை அவரை பாடச் சொல்லி வற்புறுத்த, பாடகர் திலகம் சோகமே உருவாக பாட மறுத்து பின் இணங்க, அங்கிருக்கும் அகந்தை குமபல் அவரை நையாண்டி செய்து கை கொட்டி சிரிக்க, பாடகர் திலகம் கொட்டாங்கச்சி வயலின் இசைத்து பஞ்சடைந்த கண்களுடன் அழுதபடியே பாடும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.  நாடி நரம்புகளெல்லாம் புகுந்து நம் மனதை கலங்கடிக்கும் பாடல். சரண வரிகளைக் கேட்டு கலங்காத மனம் இருக்கவே முடியாது.  டி.எம்.எஸ் அவர்களுக்காகவே எழுதப்பட்ட பாடல்.  கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல் நெஞ்சில் நிலையாக நிற்கும் பாடல்.  எங்கே நான் வாழ்ந்தாலும்  என்னுயிரோ பாடலிலே பாட்டெல்லாம் உனக்காக  பாடுகிறேன் என்னுயிரே எங்கே நான் வாழ்ந்தாலும்  என்னுயிரோ பாடலிலே  பாட்டெல்லாம் உனக்காக  பாடுகிறேன் எந்நாளும்  பாடுகிறேன் என்னுயிரே........(எங்கே).  இனிமை கொஞ்சும்  இளமை நெஞ்சில்  உலகம் எல்லாம்  காணுகிறேன்  ந